ஆரம்ப காலம் முதல் உள்ள தமிழ் எழுத்துக்களின் வடிவங்கள்!

தமிழனின் அறிவு உலகத்தாரால் ஒப்பிட்டு பார்க்க முடியாத ஒன்றாகும். உலகநாடுகளின் விஞ்ஞான வாளர்ச்சிக்கு முன்பே சங்க கால தமிழன் இது நிலவுலகம் என்றும் மண், ஆகாயம், காற்று, தீ, நீர் என்ற ஐம்பூதங்களால் உண்டானது என்றான். வானத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து தீயும், தீயிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் தோன்றியதை புறநானூற்றுப் பாடலிலும், பரிபாடலிருந்து பாடி தமிழனின் வானிவியல் அறிவை வெளிப்படுத்தி வியக்க வைத்தார்கள். நீரின் தன்மையை அறிந்தார்கள். அதன் ஆழத்தை பொறுத்து நீரின் அழுத்தம் அதிகாமாகும் என்றும், நீரை சுருக்க முடியாது என்றும் ஒளவையார் கூறி பல நூற்றாண்டுகள் பின்பே விஞ்ஞானம் இவ்வுண்மையை கண்டு பிடித்தது.
பழங்கால தமிழரின் அறிவியல் அறிவு அளவிட முடியாது. தமிழன் வேளண்முறையிலும் அறிவுள்ள சிந்தனையை கொண்டிருந்தான். நிலத்தை பல முறை ஆழ உழுவதால் சூரியனிடம் நில சத்தை பெரும், அதனால் உரமின்றி செழிப்படையு ம் என்ற அறிவியல் செய்தி திருக்குறளில் உள்ளது. நிலத்தை மழை நீர் அரிப்பின்றி தடுப்பதில் தனித்திறமை பெற்றவர்கள் தமிழர்களே. கட்டிட கலையிலும், நீர்யியலும் தமிழர் மட்டுமே அறிந்திருந்தனர். நீரைதரை உரிஞ்சாமலும் சமதரையில் அணை கட்டும் திறனும் தமிழர்களுக்கே உரித்தானது. அதற்கு சான்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டிய கல்லணையே ஆகும். எகிப்து நாட்டில் நைல் நதியில்அணைகளை கட்டியதும் தமிழ்நாட்டு நீரியல் கட்டுமான வல்லுநர்களே ஆவர்கள். சிற்பக்கலையிலும் தமிழர்கள் சிறந்தவர்கள். தமிழன் போற்றி வளர்த்த கலைகளில் போரியலும் ஒன்று. படையமைப்பு, போர் உத்தி, போரிடும் முறை இதில் அடங்கியவை ஆகும். தமிழன் தன்வாழ்க்கையின் இருகண்களாக காதலையும், வீரத்தையும் கருதினான்.
தமிழ் மொழி
சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததால் வாழ்க்கைக்கு இலக்கணம் கூறும் தொல்காப்பியம் பெற்றோம். இயல் இசை, நாடகம் என முப்பிரிவை கொண்டும் தமிழை வளர்த்தோம். இலக்கிறதமிழ், சங்க இலக்கிய போக்கிலிருந்து மாறி சமய மொழியானது. பக்தி இயக்க காலத்தில் சித்தாந்த மொழியாகவும், தத்துவ விளக்க மொழியாகவும் போற்றப்பட்டது. அப்போது உருவாக்கப்பட்ட தேவாரம், சைவ இலக்கியங்கள், வைணவ காசுரங்கள் இசைப் பாடல்களாக உருவாக்கப்பட்டன. இதனால் இயற்றமிழாக இருந்த தமிழை சமய தமிழாகவும், இசைத் தமிழாகவும் மாற்றின. சங்க காலத்திற்கு பின்னால் செய்யுள் படிப்பது போல் இருந்த உரைநடையை ஐரோப்பாவில் இருந்து சமய தொண்டாற்றி வந்த தமிழறிந்த வீரமாமுனிவர் என்ற பெஸ்கி பாதிரியார் உரை நடையில் முதன் முதலாக நூல் எழுதி இன்றைய உரைநடை வளர்ச்சிக்கு வழிகாட்டினார்.
தமிழ் வளர்ச்சிகும், இலக்கிய செழுமைக்கும் வழி வகுத்தார். சித்தமருத்துவம் எனும் மருத்துவ முறை தமிழில்தான் தோன்றியது. 1830-ஆம் ஆண்டிற்கு பிறகு தாய்மொழியாகிய தமிழ் மூலம் சிறுவர்களுக்கு பாடம் புகட்டு தமிழ் பயிற்சி மொழித்திட்டம் தொடக்கப்பட்டது. முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழே பயிற்சி மொழியாக்கப்பட்டது. 1930/ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடுநிலைப்பள்ளி வரை இருந்த தமிழ் பயிற்சி மொழி திட்டம் பள்ளி இறுதி வரை நீடிக்க வழி வகுக்கப்பட்டது. 1931-ல் தமிழ் மேகஸின் என்ற முதல் தமிழ் மாத இதழ் வெளிவர தொடங்கியது. நம் உண்ணும் உணவை நமது குடல் நமது வயிற்றால் செறிப்பது போல நமது அறிவை நம் தாய் மொழியில்தான் பெற வேண்டும் என்ற தாகூரின் உணர்வு தமிழ் மட்டும் காலத்தை வென்ற மொழியாக நிலைத்து நிற்கும் திறன் படைத்துள்ளது. சங்க காலம் முதல் ஆங்கிலேயர் ஆட்சிகாலம் வரை தன் வளர்ச்சி பாதையில் பல மாற்றங்களை தமிழ் ஏற்றுக் கொண்டது. காலத்திற்கு ஏற்ப வளைற்து, நெளிந்து கொடுக்கும் மொழியே நிலைத்து நிற்க முடியும் என்பதற்கு தமிழ் மொழியே சான்று.
தமிழ் எழுத்து வடிவங்கள்
இந்தியா முழுவதும் கிடைக்கும் கல்வெட்டு எழுத்துக்களிலேளே காலத்தால் மிகவும் பழமையானதும் முன்னேடியானதுமாக தமிழகத்தின் குகைகளில் காணப்படும் எழுத்துக்களே ஆகும். கி.மு. 300 க்கும் முன்னதாக சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்னதாக எழுதப்பட்டது. தமிழ் எழுத்துக்களின் வரி வடிவில் மிக்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி ஒழுங்கான வடிவமைப்பு கி.பி. 6-ஆம் நுற்றாண்டில் பலலவர்காலத்தில் வடிவமைக்கப்பட்டது. தமிழகம் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் நாடுகளில் தமிழே பயன்படுத்தப்பட்டது. இவர்களின் காலங்களில் அவரவர்கேற்ப எழுத்துக்களை வடிவமைத்துக் கொண்டார்கள். சேரர்களால் உருவாக்கப்பட்டது வட்டெழுத்து வடிவம். பாண்யர்கள் ஆட்சி காலத்தில் கோல் எழுத்து முறை கடைப்பிடிக்கப்பட்டது. சோழ பேரரசு காலங்களில் வட்டடெழுத்தும் கோலெழுத்தும் கலந்த தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தினார்கள்.
நன்றி : எங்கள் ஊர் தமிழ் அறிஞர்.