தமிழர் சிறப்புகள் தமிழர்களின் வீரம்

தமிழர்களின் வீரம்

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழர் சிறப்புகள்  
படம்

தமிழர்களின் வீர வரலாறு:

வீரம் என்ற சொல்லை மற்ற மொழிகளுக்குத் தந்தது தமிழ் மொழியாகும். உதாரணம் வீரபூமி, வீரசக்கரா விருது, மகாவீர் தியாகி, மாகவீர்பிரசாத், மகாவீரர், இதேபோல் ஆங்கிலத்தில் சொல்லப்படும் வேலர் என்ற வேல் ஆயுதத்துடன் தொடர்பு கொண்டிருக்கவேண்டும். எனவே வீறு கொள்ளுதல், வேலெறிதல் சேரனின் விற்கொடி, சோழனின் புலிக்கொடி முதலானவை தமிழ் மண்ணைச் சார்ந் ததாகும். தமிழர்கள் வீரத்தை பெரிதும் போற்றினார்.

வீர விளையாட்டுகள், போட்டிகள், மிருகங்களை அடக்குதல் முதலியன தமிழர்களின் வாழ்க்கையில், திருமணங்கள் மற்றும் திருவிழாக் களுடன் இரண்டறக் கலந்தவை. புலியை வேட்டையாடி புலிப்பல்லுடன் கூடிய மங்கல நாணைக் கொண்டு வரும் மணமகனுக்கு மணமகளை பரிசாகத் தந்தார்கள். போர்க் களத்திலே புறமுதுகு காட்டுவது வீரனுக்கு அழகல்ல.

மார்பிலே காயப் பட்டு இறப்பதையே பெரிதும் விரும் பினார்கள். இத்தகைய வீர மறவர் களுக்கு இணையான வீரர்களை உலகில் காண முடியாது. முதுகில் காயப்பட்டதினால் பெற்ற மகனை தாயே வெட்டிக்கொன்ற காட்சிகளை இலக்கியங்களிலே காணுகின்றோம். திராவிடர்களின் முக்கியப் போர் ஆயுதங்கள் வாள், ஈட்டி, சூலம், வில் முதலியனவாகும். ஆரியர்கள் குதிரையைப் பெரிதும் பயன்படுத் தினார்கள். மாறாக, மகாபாரதத்தில் பீஷ்மர் முதுகில் அம்புகள் துளைக்க படுத்திருந்தார். இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் 13 முதல் 14 ஆண்டுகள் வரை காவியக் கதாநாயகர்கள் வனவாசம் சென் றார்கள்.

அப்போது அவர்கள் காட்டில் உண்மையாகவே வசிக்கும் புலி, சிங்கம், யானை போன்ற மிகக் கொடிய மிருகங்களுடன் போரிட வில்லை. மாறாக தேவர் உலகத்தில் இருந்து வந்த, சமஸ்கிருதம் பேசும், ஜடாயு, ஜாம் பாவான், வாலி, ஆஞ்ச நேயர், இலங்கைக்கு பாலம் கட்டியதாக சொல்லப் படும் நளன் என்னும் குரங்கு முதலி யனவற்றைத்தான் சந்தித்தார்கள்.

திராவிடநாட்டில் கேரளாவில் ஆலப்புழாவில் நடைபெறும் படகுப் போட்டி, மதுரை ஜல்லிக்கட்டு, திருச்சூர், மைசூர் ஆகிய நகரங்களில் நடை பெறுகின்ற திருவிழாக்களில் யானைகளின் அணிவகுப்பு நடை பெறுகின்றது. இது திராவிடர்களின் கடல் வாணிகத்தின் சிறப்பினையும், காட்டு மிருகங்களை அடக்கி, நாட்டுப் பணிகளுக்கு பயன்படுத்துவதையும் தெரிவிக்கின்றது. ஆரிய கலாச்சாரத்தில் உறியடிக்கும் நிகழ்ச்சி திருவிழாக்களில் பெரிதும் காணப்படுகின்றது.

ஆரியர் வரலாறும் - கோவில்களும்:

சரகோணிய (Sargonya) ர்களின் வம்சத்தில் அசுரபணிபால் (Ashurapanipal) (கி.மு. 669_ 627) பாபிலோனியாவை ஆண்டான். அவன் ஈழத்தை ஆண்ட மன்னன் மற்றும் மகன் தாமரிதுவை வென்றான். அவனது அரசு நைல்நதி முதல் காகஸ் மலை வரையிலும், மற்றும் மத்திய தரைக்கடல் முதல் பாரசீக வளைகுடா வரை பரந்து இருந் தது. இந்த மன்னன் சிறந்த நூலகத்தை நிறுவினான். இலக்கியங்களை வளர்த் தான்.

கி.மு. 1000இல் ஆரியர்கள் ஒரு பகுதி யினர் காகஸ் மலைப்பகுதி (ஆர்மெனியா) யில் இருந்து வெளியேறி பாரசீகத்தில் தங்கினார்கள். இதன்பின் பாரசீகம் எழுச்சி பெற்றது. யூதர்களால் “The Lords” மற்றும் ‘anointed’ என்ற அழைக் கப்பட்ட சைரஸ் (Syrus). அவரது மகன் ஷெர்ஷா (கி.மு. 486_465) இருவரும் அய்ரோப்பா வரை படையெடுத்துச் சென்று கிரேக்க கட்டடங்களையும், கோவில்களையும் கொளுத்தினார்கள். இதற்குப் பழி வாங்க அலெக்ஸாண்டர் கி.மு. 331இல் பாரசீக நகரங்களைக் கொளுத்தினார்.

இந்த வரலாற்றுப் பின்னணியில் தான், இந்தியாவுக்குள் கி.மு. 1500இல் நுழைந்த ஆரியர்கள் கொஞ்சம் கொஞ் சமாக வளர்ந்து கி.பி. 325 இல் வைசிய ரான குப்தர்களால் கருடக்கொடியுடன் கூடிய வைணவப் பேரரசை நிறுவி னார்கள். இவர்கள் காலத்தில் வேதமதம், வைணவமதமாக மாறி புராணங்கள், இதிகாசங்கள் வளர்ந்தன. குப்த மன்னர்கள் பாகவதர்கள் என்றழைக்கப் பட்டனர். குப்தர்காலத்துக்குப்பின் சமஸ் கிருதம் வட்டார மொழியானது. மேலும் ஆரியர்கள் மதச்சடங்குகள் செய்து தானம் பெறுவதில் நாட்டம் கொண் டார்கள்.

கோவில்களும் , திராவிடர்களும்:

திராவிட நாகரிகத்தினை பிரதி பலிப்பவை கோவில்களாகும். கோ என்றால் அரசனை அல்லது இறை வனைக் குறிக்கும். அரசனும், இறை வனும் வசிக்கும் இடம் நகர். நகர் என்றால் கோவில் என்ற ஒருபொருள் உண்டு. நாகரிகம் வளர்ச்சி அடைந்த போது கோவில் நகரங்கள் தோன்றின. நகரத்தை மட்டும் எல்லையாகக் கொண்ட நகர அரசுகள் (City States) தோன்றின.

உதாரணம் சிப்பாய் கலகத்தின் போது (1857) முகலாய மன் னன் பகதூர்ஷா டில்லியை மட்டும் ஆண்டார். இந்தியாவில் 56 தேசங்கள் இருந்ததாக சொல்லப்படுவது 56 நகரங்களைக் குறிக்கின்றது. மேலும் புரம் என்றால் கோட்டை என்று பெயர். இவ்வாறு நகர் என்றும் கோவில் என்றும், குடி என்றும், குன்றம் என்றும், ஊர் என்றும், பட்டணம் என்றும் வழங்கப்படும் ஊர்கள் இந்தியாவெங்கும் பரவி இருக்கின்றன.

இந்த பெயர்கள் அனைத்தும் இந்த உலகத்திற்கு திராவிடரின் நாகரிகத்தைப் பறை சாற்றுகின்றன. இந்த திராவிட நாகரி கத்தின் அடையாளமாக்க, சிந்து சமவெளியில் காணப்படும், நகர நாகரிகம் ஆகும். மற்ற நாட்டினரெல்லாம் கல்லறை கட்டிய காலத்தில் நகர நாகரிகம் படைத்தவன் திராவிடன்.

பழங்காலத்தில் நாவலந் தீவில் (இந்தியாவில்) திகழ்ந்த கட்டடக் கலைகளில் முதன்மையானவை (அ) காந்தாரக்கலை (ஆ) பாரசீகக்கலை (இ) திராவிடக்கலை இவைகளின் சிறப் புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

காந்தாரக் கலை

இந்தக் கலை அலெக்சாண்டர் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த போது இந்தியாவில் பரவியது. இதன் விளைவாக இந்தியாவில் இருந்த கனிஷ்கர் போன்ற மன்னர்கள் புத்த விகாரங்கள், புத்தர் சிலைகளை உரு வாக்கினார்கள். காந்தாரக்கலையின் சிறப்புகள் அகன்ற மதிற்சுவர்கள், குறுகிய இடைவெளியில் தூண்கள், துண்களை இணைக்க விட்டங்கள் இந்தக் கலையின் காலம் கி.மு. 650 முதல் 100 கி.மு. வரை.

பாரசீக கட்டடக் கலை:

1526 பாபர் உருவாக்கிய பேரரசு 1540இல் முடிவுற்றது. முகல் (Mughal) என்றால் பாரசீகமொழியில் மங் கோலியரை குறிக்கும். எனவே 1540இல் நாட்டை இழந்த ஹுயூமான் பாரசீகத்தில் தஞ்சம் அடைந்தார். பின் பாரசீக இளவரசியை மணந்து படைதிரட்டி வந்து 1555-இல் டில் லியைப் பிடித்தார். இந்த இடைக் காலத்தில் 1528 இல் கட்டப்பட்ட பாபர் மசூதி யாரிடம் இருந்தது என சிந்திக்கவும்.

ஹுமாயூன் பாரசீகத்தின் துணையால் அமைத்த டில்லி பேரர சில், டில்லியைச் சுற்றி கோட்டைகள், மசூதி அரண்மனைகள் டில்லியை அலங்கரிக்கின்றன. பாரசீக கட்டடக் கலையை ஒட்டி அமைந்தவற்றில் அமெரிக்க குடியரசு தலைவர் பாரக் ஒபாமா கண்டுகளித்த ஹுமாயூன் Tomb. தாஜ்மஹால் முதலியனவாகும். பாரசீக கலை இல்லையேல் டில்லி இல்லை. இந்தக் கால கட்டத்தில் ஆரிய கட்டடக்கலை என்று இருந்ததாக வரலாறு சொல்லவில்லை.

திராவிட கட்டடக் கலை:

இந்தியாவில் குப்தர்கள் காலம் (கி.பி. 320 முதல் 650 வரை) சிறு கோவில்களே கட்டப்பட்டன. இதில் கி.பி. 500 முதல் கி.பி. 800 வரை உருவான குடைவரை கோவில்கள் பிராம்மானியம் அல்லது சமணம் சார்ந்தவை. கி.பி. 800 இல் சாளுக்கியர்கள் வீழ்ந்து ராஷ்டிர கூடர்கள் வந்தார்கள். இவர்கள் திரா விட கட்டடக்கலையை ஊக்குவித்து எல்லோராவில் கைலாசநாதர் கோவிலை கட்டினார்கள்.

சாளுக்கியர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் நாகரா மற்றும் திராவிடக்கலை கலந்த வேசர அமைப்பைக் கொண்டு கோவில்களை வடகர்நாடகாவில் கட் டினார்கள். உதாரணம் பட்டக் கல்லில் உள்ள காசிநாதர்கோவில் (கி.பி. 450 முதல் 650) திராவிடக் கட்ட டக் கலையை வளர்த்தவர்கள் கீழ் வருமாறு:

1. பல்லவர்கள் (600 முதல் 900) மாமல்லபுரத்தில் கல்லில் குடையப் பட்ட இரதங்கள், காஞ்சிபுரம் கைலாச நாதர் கோவில்.

2. சோழர்கள் (900 முதல் 1200) திராவிடக்கலை முழுமை அடைந்தது. தஞ்சையில் கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் கோவில்கள் குறிப்பிடத்தக்கவை.

3. விஜயநகர அரசர்கள் (1350 முதல் 1565) மதுரை, திருவரங்கம் , ஹம்பி, விட்டல்லா கோவில்கள் கட்டினார்கள்.

4. நாயக்கர்கள் (1600 முதல் 1750) இவை தவிர சண்டெல்லா இனத் தவர் எழுப்பிய கஜுராஹா, சோலங் கியர் எழுப்பிய குஜராத் சூரியனார் கோவில்கள் தனித்தன்மை வாய்ந்தவை. மேலும் கூர்ஜரர்கள் சோமநாதபுரத்தில் தங்கத்தால் ஆலயத்தைக் கட்டினார்கள். இந்த ஆலயத்தை கட்டிய பீமதேவ் என்ற மன்னன் கஜினிமுகமதுவுடன் போரிட் டுத் தோற்றான்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்