உலகிலேயே அதிக விபத்து நடக்கும் நகரங்களில் சென்னைக்கு 2வது இடம்

உலகில் அதிகம் விபத்துக்கள் நடைபெறும் நகரங்களின் பட்டியலை உலக சுகாதார அமைப்பான WHO வெளியிட்டுள்ளது. ஒரு லட்சம் பேரில் எத்தனை பேர் விபத்தில் இறக்கின்றனர் என்ற கணக்கீட்டின் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் பிரேசில் நாட்டின் தலைநகர் ஃபோர்ட் எலிசா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த படியாக தமிழகத்தின் தலைநகரான சென்னை இரண்டாவது இடத்தில உள்ளது.
இந்த பட்டியலில் இந்திய நகரங்களான ஜெய்பூர் 4வது இடத்திலும்,இந்தூர் 16வது இடத்திலும் உள்ளன. மேலும் கொல்கத்தா ,டெல்லி,பெங்களூர் நகரங்கள் முறையே 23,24,25 இடங்களை பெற்றுள்ளன. மும்பை 40 வது இடத்தில உள்ளது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள இந்த அறிக்கை சென்னை வாசிகளிடையே ஓர் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.